LOADING

Type to search

இலங்கை அரசியல்

காத்தான்குடியில் சட்டவிரோதமாக ஒன்று கூடிய உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த 4 பேர் உட்பட 30 பேர் கைது

Share

கனகராசா சரவணன்

காத்தான்குடியில் வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடி கூட்டம் ஒன்று நடாத்திய உயிர்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுத்துள்ள ஸாரான் காசிம் சாகோதரியின் கணவர் மற்றும் 4 பேர் உட்பட 30 பேரை சந்தேகத்தின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை (01) அதிகாலையில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை இரவு சட்டவிரோதமாக உயிர்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனப்படும் ஸாரான் காசிம் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இடம்பெற்ற துப்பாக்கி கூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிசார் சுற்றிவளைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்

இதில் கைது செய்யப்பட்டவர்கள் ஸாரான் காசிமின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.