LOADING

Type to search

இலங்கை அரசியல்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குள் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்களுடன் சாரதிகள் கைது!

Share

பு.கஜிந்தன்

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குள் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன்-அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் 03/04 புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும்-அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.

அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை உரிய அனுமதிப் பத்திரம் இன்றியும்-அனுமதிப் பத்திரத்தில் மோசடி மேற்கொண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.