LOADING

Type to search

மரண அறிவித்தல்

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் | திருமதி. திலகமணி (பாப்பா) குமரகுருபரன்

Share

(மலேசியா, யாழ்ப்பாணம் திருநெல்வேலி)

கடும் மழையோடு காற்றும் ஓங்கி வீசிய நாளொன்றில்
தங்களைத் துணையாய் தாங்கி நின்ற மரம் சாய்ந்தது!
சடுதியாய் வீழ்ந்த விருட்சத்தின் நிழலின்றி
தெளிவோடு நீங்கள் எம்மைக் காத்து நின்றீர்கள் அம்மா!
இத்தனை ஆண்டுகள் தந்தையும் தாயுமாய் பாத்திரம் ஏற்று
இன்ப துன்பம் இரண்டையும் சகித்து இறைபதம் ஏகினீர்
சேர்ந்த இடத்தில் உங்களைச் சுற்றி தேவர்கள் இருப்பர்
தேக சுகத்தொடு விண்ணிலும் நீங்கள் நிச்சயம் வாழ்வீர்!

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலி, ஊர்காவற்றுறை கரம்பொன், கொழும்பு, கனடா ரொரன்ரோ ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமான திருமதி. திலகமணி (பாப்பா) குமரகுருபரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

01-08-2024 வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்தி கிரியைகள் நடைபெற்று, 3300 McNicoll Avenue (Middlefield & McNicoll) சந்திக்கு அருகாமையில் அமைந்துள்ள Baba Banquet Hall மண்டபத்தில் 11-08-2024 ஞாயிற்றுக்கிழமையன்று ஆத்மசாந்திப்பிரார்தனையும், அதனைத் தொடர்ந்து மதியபோசனமும் நடைபெறும்.

அன்னாரின் பிரிவுத்துயரினால் நாம் வாடி நின்ற போது எமக்கு ஆறதல் தெரிவித்தவர்கள் உடனிருந்து இடர்கள் தீர்த்தவர்கள், அன்னையின் இல்லத்திற்கு வந்தவர்கள், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்தவர்கள், தொலைபேசியில் அழைத்து ஆறதல் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டவர்கள், உணவளித்தவர்கள் இன்னும் பல வழிகளில் உதவிகள் புரிந்தவர்கள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்ப சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்: மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:
சிவகுமார் (சிவா – மகன்): (647) 504-6779
பரமேஸ்வரன் (ஈஸ்வரன் – மகன்): (416) 722-5802
குகன் (மருமகன்): (416) 624 9261