LOADING

Type to search

இலங்கை அரசியல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்தார். இன்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப். கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப். கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது. அந்த ஒப்பந்தத்தின் படி டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசிய டிரம்ப், கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார். அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார்.

Share

(கனகராசா சரவணன்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பதில் பொதுச் செயலாளர் சாரதிதுஷமந்த ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்து தங்களது ஆதரவினை வழங்கினர்.

இன்று காலை ஃப்ளாவர் வீதியில் அமைந்துள்ளது தேர்தல் காரியாலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இரு தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை வெற்றிபெறச் செய்யவுள்ளதாக அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கஜன் இராமநாதன், 2013 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு ,2015 இல் தேசியப் பட்டியல் உறுப்பினராக முதல் தடவையாக பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீPலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டு இரண்டாவது தடவையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ;ட உபதலைவராக கடமையாற்றி வருகின்றார். அங்கஜன் இராமநாதன் பாராளுமன்றத்தில் குழுக்களின் பிரதித் தவிசாளராகவும் செயலாற்றி வருகின்றார் .

சாரதி துஷமந்த மித்ரபால் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார். கடந்த காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது