LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கீடு – பதில் அரசாங்க அதிபர் பிரதீபன் மகிழ்ச்சி!

Share

பு.கஜிந்தன்

2024ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு 2024ஆம் ஆண்டு அபிவிருத்திக்காக அதிக நிதி கிடைத்தது. குறிப்பாக 1233.94 மில்லியன் ரூபா நிதி அபிவிருத்திக்காக கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

28-08-2024 அன்று புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் இணை தலைமையில் நடைபெற்றது. இதன்போது வரவேற்பு உரை ஆற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டாயிரத்து நானூற்று அறுபத்தேழு வேலைத்திட்டங்களுக்கு இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச பிரிவுகளிலும் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறன..

அதில் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியாக கிடைக்கப்பெற்ற 322 மில்லியன் ரூபா நிதி உள்ளடங்குகிறது. ஒட்டுமொத்த நிதிக்கான வேலைத் திட்டங்களும் அந்தந்த பிரதேச செயலர் பிரிவுகளில் கட்டமைபுரியும் உத்தியோகத்தர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.