LOADING

Type to search

இலங்கை அரசியல்

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன்

Share

ந.லோகதயாளன்.

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்படவுள்ளமை உறுதி செய்யப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரசாங்க அதிபராக பணியாற்றிய சமயம் அப்போதைய யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் குழுக்களின் பிரதித் தலைவரின் முயற்சியின் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

இவ்வாறு தூக்கியெறியப்பட்ட சமயம் அவரது ஒய்விற்கு 3 மாத காலமே ஓய்விறகு இருந்தபோதும் பதவியினை துறந்தார். இவ்வாறு பதவி துறந்தவரை எஞ்சிய 3 மாத காலத்திற்கான சம்பளத்தையும் அரசிற்கு செலுத்தும்படியாக நாடாளுமன்ற உறுப்பினர் வியூகம் வகுத்த சமயம் அந்த 3 மாதகால சம்பளத்தையும் அரசிற்கு மீளச் செலுத்தியே ஓய்வு பெற்றுச் சென்றிருந்தார்.

இந்த நிலையில் தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னைய ஆட்சியில் பழி வாங்கப்பட்டவர் என்ற அடிப்படையில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை வழங்க ஜனாதிபதி அநுராகுமர திசநாயக்கா தரப்பு முன்வந்தமையால் நா.வேதநாயகன் அதற்கு பச்சைக்கொடி காட்டியுள்ளார்.