பு.கஜிந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு (14.05.2024) அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் கட்டடத் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் குருதிக்கொடை வழங்கி வரும் ...
ராஜபக்ஸ சகோதரர்கள் அரியணையில் இருந்து துரத்தப்பட்டு அவ்விடத்துக்கு ரணில் விக்கிரமசிங்க இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனாதிபதியாகப் பிரதியீடு செய்யப்பட்டார். அவர் ஒரு பொருளாதார நிபுணர் , சரிந்திருக்கும் பொருளாதாரத்தைத் தூக்கி நிமிர்த்துவார், அடித்தட்டுமக்களின் வாழ்வு மேம்படும் என்று சொல்லியே முன்னிறுத்தப்பட்டார். ஆனால் , இன்று இலங்கையின் சனத்தொகையில் கால்வாசிக்கும் ...
(கனகராசா சரவணன்) சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆணையாளர் அக்கினஸ் அம்மையார் 18 ம் திகதி முள்ளிவாய்கால் நினைவேந்தலில் கலந்து கொள்ளவதற்காக இலங்கைக்கு வருகின்றார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகர் சுமைதாங்கி சந்தியில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொலிசாரின் அராஜகத்தின் மத்தியில் முள்ளிவாய்க்கால் ...