யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில்,இந்தியஅமைதி காக்கும் படையினர் செய்த படுகொலைச் சம்பவம் கடந்த இருபதாம் திகதி நினைவு கூரப்பட்டது. அதே நாளில் யாழ்ப்பாணம் முத்த வெளியில் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சி இடம்பெற்றது. ஆஸ்பத்திரிப் படுகொலைகளை நினைவு கூரும் நாளில் இசை நிகழ்ச்சியைச் செய்யாமல் வேறு ஒரு நாளைத் தெரிவு ...
வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிவானந்தராசா சிவனேசன் (றாயூ) இன்றையதினம் மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதெவது, இன்று காலை திடீரென சுகயீனமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற வழியில் மரணமடைந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவரை கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்களுக்காக அமெரிக்க தூதரகத்திற்குச் சென்ற முதியவர் கொழும்பில் கடந்த 23 ஆம் திகதி முதல் காணவில்லை என உறவினர்கள் ...