பூநகரி பொன்னாவெளிப் பகுதியில் மக்கள் குடியேற விரும்பினால் மக்களுக்கான வீட்டுத்திட்டகளை வழங்கத் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 11-04-2024 அன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகததில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் ...
வடமாகாணத்தின் பாரிய நீர்ப்பாசனக்குளமாகிய இரணைமடு குளத்தின் கீழ், 2024ம் ஆண்டுக்கான சிறுபோக செய்கை சம்மந்தமான விசேட கலந்துரையாடல் 11-04-2024 அன்று கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்கதிபர் எஸ். முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் கரைச்சி பிரதேச செயலாளர், ...
நடராசா லோகதயாளன் உள்ளூராட்சி சபை தேர்தல்கள் பிற்போடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மகிந்த தேசப்பிரிய தனது வீட்டுக்கு முன்பாக போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் இன்றி அதிகார வர்க்க ஆட்சியின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களை நடத்துவது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். உள்ளூராட்சி மன்றங்களை ...