LOADING

Type to search

சினிமா

‘அன்பில் அவன்’ என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பென நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறினார்

Share

‘அன்பில் அவன்’ என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பென நடிகை ப்ரீத்தி முகுந்தன் கூறினார். அசோக் செல்வன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதிய திரைப்படத்திற்கு, ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டு, அதன் முதல்காட்சிக் மற்றும் தலைப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே. செல்வா மேற்கொள்ள, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அழகான காதல் கதையாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. கருணா மூர்த்தி- அசோக் செல்வன் – அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அன்பில் அவன் திரைப்படத்தின் முதல்காட்சி மற்றும் தலைப்பு முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பான விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை ப்ரீத்தி முகுந்தன், “அன்பில் அவன்’ என் இதயத்திற்கு நெருக்கமான படைப்பு. இந்த படத்திற்காக நான் நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்காக என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும் பிடிக்கும். இந்தப் படத்தில் என்னுடன் நடித்த சக நடிகரான அசோக் செல்வனுக்கு நன்றி. சக நடிகைக்கு அதிக அளவில் திரை பங்களிப்பை அளித்து, இப்படத்தை உருவாக்கியதற்காக அவருக்கும் நன்றி” என்றார்.