LOADING

Type to search

அரசியல்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்

Share

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது.

இந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறை, துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.