பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் குறித்து மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது
Share
பொதுத்தேர்வுகள் முறைகேடுகள் குறித்து மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க வகை செய்யும், பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா, 2026 தொடர்பாக விவாதம் நடைபெற்றது. எனினும், டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அடக்குமுறையை கையாண்ட விவகாரம் தொடர்பாகவும் மேகதாது விவகாரம் தொடர்பாகவும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நண்பகல் 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும், ஒத்திவைக்கப்பட்டது. அவை 2 மணியளவில் மீண்டும் கூடியது. இதில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறியது. தேர்வு சீர்திருத்த மசோதா நிறைவேறிய பின்பு மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால், ஒரு மாதத்திற்கும் மேலாக வினாத்தாள் கசிவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு ஒரு தெளிவான சட்ட ரீதியிலான பதில் கிடைத்து உள்ளது. இந்த சூழலில், அவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நண்பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் 2 மணி அளவில் கூடியபோது, பொதுத்தேர்வுகள் (முறைகேடுகள் தடுப்பு) திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.















