LOADING

Type to search

இலங்கை அரசியல்

யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை மாணவி நிரோஷினியின் அகால மரணம்

Share

​யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இசைத்துறை பீட மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். கண்டி மாவட்டத்தை சேர்ந்த நிரோஷினி (வயது 27) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மாணவி யாழ்ப்பாண பல்கலைக்கழக இசைத்துறை பீடத்தில் கல்வி கற்று வருகின்றார்.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மாணவி வைத்தியசாலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது அனைவர் மத்தியிலும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கற்ற சமூகத்தின் தொடர்ச்சியான இழப்புகள் பாரிய இழப்புகளாகவே பார்க்கப்படுகிறது.