LOADING

Type to search

இந்திய அரசியல்

தமிழகம் இழந்ததை மீட்டெடுக்க,தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மட்டுமே முடியும் – எல்.முருகன்

Share

தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த வேண்டும் என்கிற ஒருமித்த கருத்தோடு தமிழக மக்களும், நமது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும் இணைந்து இயங்கி வருகிறோம். திமுக அரசின் கடந்த ஐந்து வருட ஆட்சிக் காலத்தில், தொழில் ரீதியாகவும், சட்டம்-ஒழுங்கு சார்ந்தும், பொருளாதார வளர்ச்சியிலும் தமிழகம் இழந்த அனைத்தையும் மீட்டெடுக்க, நமது தேசிய ஜனநாயக கூட்டணி அரசால் மட்டுமே முடியும். அவிநாசி வாக்காளப் பெருமக்களின் கோரிக்கைகளும், தொலைநோக்குப் பார்வை கொண்ட திட்டங்களும் நிறைவேறிட, தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா அம்மா , அண்ணன் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி ஆகியோரது ஆசிபெற்ற சின்னமாகிய நமது தாமரைச் சின்னத்திற்கு வாக்களிப்போம். தாமரையை மலரச் செய்வதன் மூலம், அவிநாசியை வளரச் செய்வோம்! என தெரிவித்துள்ளார்.