சீன நாட்டு முதலீட்டாளர்களுக்கும் அமைச்சர் டக்ளஸுக்கும் இடையே சந்திப்பு!
Share
பு.கஜிந்தன்
சீன நாட்டு முதலீட்டாளர்கள் குழுவினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து தாம் கடற்றொழில் துறையில் முதலீடுகளைச் செய்வதற்கும், தமது படகுகளைக் கொண்டு பிடிக்கும் மீன்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
தமக்கான அனுமதிகளை கடற்றொழில் அமைச்சு வழங்குமாக இருந்தால் இத்துறையில் பாரிய முதலீடுகளை செய்வதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர்கள் தமது திட்டவரைபை தமக்கு கிடைக்கச்செய்தால் அதுதொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
இச்சந்திப்பின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த மற்றும் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டனர்.