ஒப்பந்தம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு. சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தில் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதில் இந்திய அரசு தவறிழைத்துள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் 1964 ஆம் ஆண்டு இலங்கைப் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இந்தியப் பிரதமரான லால்பகதூர் சாஸ்திரிக்கும் ...
நடராசா லோகதயாளன் இலங்கையில் மிகவும் கொடூரமாக நடைபெற்று 2009 ஆம் அண்டு மே மாதம் ரத்தக்களறியுடன் முடிவடைந்த யுத்தம் இன்றளவும் பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது. அந்த யுத்தம் தொடர்பில் சில அடிப்படை கேள்விகள் முதல் மிகவும் சிக்கலான பல கேள்விகள் இதிலுள்ளன. ஈவு இரக்கமின்றி மக்கள் வகைதொகையின்றி ...
பு.கஜிந்தன் இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களின் வரலாற்றில் முதன்முறையாக குறுந்தகவல் மூலமாக ஆலய விடயங்களை அறிந்துகொள்ளக் கூடிய சேவை முறையானது தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் 06-12-2023 புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் தலைவர் ஆறு திருமுருகன் அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் மூலம் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தினால் ஆற்றப்பட்டு வரும் ...