“கனடா மற்றும் உலகெங்கும் வாழும் தமிழ்ச் சமூக மக்களுடன் நாமும் ‘ தமிழினப் படுகொலை நினைவேந்தல்’ நாளைக் கடைப்பிடிக்கின்றோம்”
Share
கனடியப் பிரதர் மார்க் கார்னி தனது அறிக்கையில் தெரிவிப்பு
கனடாவிலும் உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சமூக மக்களுடன் இணைந்து நாமும் இன்று தமிழினப் படுகொலை நினைவேந்தல் நாளைக் கடைப்பிடிக்கின்றோம் என கனடியப் பிரதர் மார்க் கார்னி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
18-05-2026 அன்று கனடா ஒட்டாவா மாநகரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தினால் வெளியிடப்பெற்ற அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் “கால்நூற்றாண்டு காலப்பகுதியிலும் பார்க்க அதிகமாக நீடித்த மேற்படி கொரூரமான போரில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தது துன்பத்திற்குரியது. அவ்வாறான குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் நான் என்றும் துணையாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பெற்ற இந்த அறிக்கையில் பிரதிகள் இங்கு காணப்பெறுகின்றன
















