LOADING

Type to search

உலக அரசியல்

ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைய முயன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது

Share

ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் நுழைய முயன்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.  ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு ஸ்பெயின். இந்நாட்டின் அருகே வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இரு நாடுகளுக்கும் இடையே மத்திய தரைக்கடல் உள்ளது. அதேவேளை, ஸ்பெயின் நாட்டுக்கு சொந்தமான தன்னாட்சி பெற்ற பகுதி சீயடா. இந்த நகரம் மொராக்கோவுடன் எல்லையை பகிர்கிறது. இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. சீயடா மொராக்கோவுடன் நிலம், கடல் வழியாக எல்லையை பகிர்கிறது. இதனிடையே, கடந்த மாதம் 30, 31 ஆகிய இரு தேதிகளில் மொராக்கோவில் இருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் கடல் வழியாக ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொராக்கோ நாட்டினர் திடீரென ஸ்பெயினுக்குள் நுழைந்தனர். இந்த சம்பவம் ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஸ்பெயினின் சீயடா நகருக்குள் கடல் வழியாக மொராக்கோவை சேர்ந்த சட்டவிரோத அகதிகள் ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர். அப்போது கடலில் மூழ்கியும், கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலிலும் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, ஸ்பெயினுக்குள் நுழைந்தவர்களை மீட்டும் மொராக்கோவுக்கே திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் அந்நாட்டு அரசு ஈடுபட்டு வருகிறது.