(21-01-2024) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கட்சியின் பொதுச் சபை உறுப்பினர்களின் அதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யும் பொதுச்சபைக் கூட்டம் இன்று(21) திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிலையில், 184 வாக்குகளைப் பெற்று ...
(மன்னார் நிருபர்) (21-01-2024) மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழர் தைத்திருநாள் பொங்கல் விழா நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(21) காலை மன்னார் வாழ்வோதய மண்டபத்தில் இடம்பெற்றது. -மன்னார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன்,மற்றும் சிறப்பு ...
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தைப்பொங்கல் விழா சிறுதானியப் பொங்கல் விழாவாகச் சிறுப்பிட்டியில் இடம் பெற்றுள்ளது. சிறுப்பிட்டி ஜனசக்தி சனசமூகநிலைய முன்றலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21.01.2024) மாலை இராசபோசனம் என்னும் கருப்பொருளில் இப்பொங்கல்விழா கோலாகலமாக நிகழ்ந்துள்ளது. தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசனின் தலைமையில் நடைபெற்ற ...