கனடா வாழ் ‘நிவாரணம்’ புகழ் செந்தில்குமரன் அவர்களது மனித நேயப் பணிகள் கடந்த பல வருடங்களாக இலங்கையைச் சென்றடைந்து ஆயிரக்கணக்கானவர்களுக்கு பலன்கள் பல கிட்டியுள்ளன. அந்த வரிசையில் கடந்த வாரம் இலங்கையின் வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு 6 இரத்த சுத்திகரிப்பு கருவிகளை வழங்கிய கனடா ‘நிவாரணம்’ அமைப்பு புகழ் ...
இந்த மாதம் 30ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளின் மாநாடு ஒன்று யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற உள்ளது. அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் அன்றாகும். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காகப் போராடும் அமைப்புக்கள் இந்த மாநாட்டை ஒழுங்குபடுத்தி வருகின்றன. வலிந்து ...
ஊடகவியலாளர்களுக்குச் சொந்தமான கட்டிடத்துடன் கூடிய காணி ஒன்றை 17 வருடங்களாக பலவந்தமாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் இராணுவத்தை அங்கிருந்து வெளியேற்ற மறுத்து, போரினால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியின் ஊடகச் சுதந்திரத்திற்கு ஜனாதிபதி அலுவலகம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெயரிடப்படாத ‘பாதுகாப்புக் காரணங்களை’ குறிப்பிட்டு, இதுவரை ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் போக்கைப் ...