சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது புனைவுப்படைப்பின் 360 பிரதிகளை விடுவிப்பதற்கு புத்தசாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் தலையிடுவதாக உறுதியளித்த போதிலும், அந்தப் படைப்புகள் இதுவரை விடுவிக்கப்படாதது குறித்து சிங்கள வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்ற தமிழ் எழுத்தாளர் கிளிநொச்சி வாழ் தீபச்செல்வன் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். ...
மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்று பிரதமரிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் ...
“நாங்கள் ஒன்றே ஒன்றைக் கேட்கிறோம். காணிகளை விடுவிப்பது குறித்து ஒரு தீர்க்கமான முடிவைச் சொல்லுங்கள். பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 1600 ஏக்கர் நிலப்பரப்பினை இராணுவத்தினர் பெரும்பாலும் விவசாய நடவடிக்கைகளுக்காகவும், அந்த விவசாய உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான விற்பனை நிலையங்களை ...