பாகிஸ்தான் : ஆப்கானிஸ்தான் முகாமில் மேற்கூரை இடிந்து 6 பேர் உயிரிழப்பு
Share

பாகிஸ்தானின் கராச்சிக்கு உட்பட்ட புறநகர் பகுதியில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான முகாம் ஒன்று அமைந்துள்ளது. இதில் இருந்த வீடு ஒன்றின் மேற்கூரை நேற்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி, பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். விபத்துக்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் மார்ச் 31-ந்தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. அவர்கள் கண்ணியத்துடன் சொந்த நாடு திரும்ப வசதியாக, முன்பே போதிய நேரம் அளிக்கப்பட்டு விட்டது என்றும் அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அப்படி இல்லையென்றால், ஏப்ரல் 1-ந்தேதி முதல் அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது