LOADING

Type to search

இந்திய அரசியல்

ராகுல், பிரியங்கா வயநாடு பயணம்

Share

தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக வயநாடு பயணத்தை ரத்து செய்த காங். எம்.பி. ராகுல் நாளை காங். பொதுச்செயலாளர் பிரியங்கா உடன் வயநாடு செல்கிறார்.

    தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இரு சம்பவங்களில் இதுவரை 163 பேர் பலியாகியுள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டனர். மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் இன்று வயநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து செய்யப்பட்டது. இன்றைய பயணம் ரத்து ஆனாலும், நாளை வயநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ராகுலுடன், பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் செல்கின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.