LOADING

Type to search

உலக அரசியல்

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

Share

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை கண்டுபிடித்ததற்காக இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வின் கண்டுபிடிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய படியெடுத்தல் மரபணு ஒழுங்குமுறையில் அதன் பங்கு குறித்த ஆராய்ச்சிக்காகவும், விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. அவர்களின் கண்டுபிடிப்பு “உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபிக்கிறது” என்று நோபல் சபை கூறியது. செவ்வாய்கிழமை இயற்பியலுக்கான நோபல் பரிசும், புதன்கிழமை வேதியியலுக்கான நோபல் பரிசும் மற்றும் வியாழன் அன்று இலக்கியத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்பட உள்ளது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவு பரிசு அக்டோபர் 14ம் தேதியன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.