குஜராத் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி
Share
குஜராத் மாநிலத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.
மராட்டிய மாநிலம் திரிம்பகேஷ்வரில் இருந்து 48 யாத்ரீகர்களை ஏற்றிக்கொண்டு குஜராத்தில் உள்ள துவாரகாவுக்கு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் அதிகாலை 4.15 மணியளவில் குஜராத் மாநில சபுதாரா மலைவாசஸ்தலத்திற்கு அருகே பேருந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராதவிதமாக அருகில் உள்ள தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்தனர். இதில் சிலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.