LOADING

Type to search

இந்திய அரசியல்

ஜார்க்கண்டில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் – கார்கே, சுனிதா கெஜ்ரிவால் பங்கேற்பு!

Share

ஜார்க்கண்டில் மாநிலத்தில்  இந்தியா கூட்டணியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுனிதா கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

     ஜார்கண்ட்டில் மாநிலத்தை ஆளும்  ‘ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சி சார்பில் அம்மாநில தலைநகர் ராஞ்சியில் புரட்சிப் பேரணி’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சர் சாம்பாய் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. தீடீர்  உடல்நலக்குறைவால் அவரால் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார். ஆனால், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.