LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தான் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து – 10 பேர் பலி

Share

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. ராவல்பிண்டியில் இருந்து கில்கிட் நோக்கி சென்ற இந்த பேருந்து கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் காரகோரம் நெடுஞ்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. தகவல் அறிந்த காவல்துறை மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.