LOADING

Type to search

இந்திய அரசியல்

மம்தா பானர்ஜி பற்றி அவதூறு கருத்து – பா.ஜ.க. வேட்பாளர் பிரசாரம் செய்ய தடை

Share

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாய், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கு வரும் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனிடையே கடந்த 15-ந்தேதி ஹல்தியா பகுதியில் நடைபெற்ற பா.ஜ.க. தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அபிஜித் கங்கோபாத்யாய், மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து தரக்குறைவான முறையில், மிகவும் மோசமான விமர்சனத்தை முன்வைத்ததாக கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக கடந்த 17ம் தேதி அபிஜித்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில் நேற்று அதற்கு அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில், அபிஜித்தின் பேச்சுக்கள் தேர்தல் விதிமுறைகளை மீறியது என தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதையடுத்து மாலை 5 மணி முதல் அடுத்த 24 மணி நேரத்திற்கு அபிஜித் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.