LOADING

Type to search

இந்திய அரசியல்

முதலில் தனது பதவியை காப்பாற்றி கொள்ளட்டும் – அண்ணாமலைக்கு அ.தி.மு.க. பதிலடி

Share

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டில்லி புறப்பட்டார். அப்போது அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. இணைந்து போட்டியிருந்தால் 35 தொகுதிகளை பிடித்திருப்போம் என எஸ்.பி. வேலுமணி சொல்கிறார். அ.தி.மு.க. கட்சியில் எடப்பாடி-வேலுமணி இடையே உட்கட்சி பூசல் இருப்பது போல் தெரிகிறது என கூறினார். இந்நிலையில், அண்ணாமலையின் பேட்டிக்கு அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு பதிலடி கொடுத்துள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க. குறித்தோ, எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி குறித்தோ பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை. தன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளைப் பார்க்காமல் அ.தி.மு.க. பற்றி மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை, முதலில் தனது பதவியையும் இருப்பையும் காப்பற்றிக் கொள்ளட்டும். அ.தி.மு.க.வை அசைத்துக்கூட பார்க்க முடியாது என தெரிவித்துள்ளது.