LOADING

Type to search

இந்திய அரசியல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஒரு கறுப்பு பெட்டியென வர்ணிக்கிறார் ராகுல் காந்தி

Share

இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், அவை ஒரு கருப்புப் பெட்டி என ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில், ‘நமது தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை குறித்து கடுமையான கவலைகள் எழுப்பப்படுகின்றன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்புப் பெட்டி. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஆராய யாரையும் அனுமதிக்கப்படுவதில்லை. நிறுவனங்கள் பொறுப்புக் கூறல் இல்லாதபோது ஜனநாயகம் ஒரு ஏமாற்று நாடகமாக மாறி, மோசடிக்கு ஆளாகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியும், அவற்றை அகற்ற வேண்டும் என எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில் தற்போது ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.