LOADING

Type to search

இந்திய அரசியல்

புத்தகத்துடன் எம்.பி.யாக பதவியேற்றார் ராகுல் காந்தி!

Share

ரேபரேலி தொகுதி எம்.பி.யாக, மக்களவையில் பதவியேற்றுக் கொண்டார் ராகுல்காந்தி. 

     18-வது மக்களவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். இரண்டாவது நாள் கூட்டத் தொடர் நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாவது நாளாக தற்காலிக சபாநாயகர் பரத்ருஹரி மஹ்தாப் தலைமையில் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அந்த வகையில், ரேபரேலி தொகுதி மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, அரசமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்தியபடி, பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றுக் கொண்ட பிறகு, வாழ்க இந்தியா, வாழ்க அரசியல் சாசனம் என்று முழக்கமிட்டார்.

தொடர்ந்து காங்கிரஸ் தமிழக எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் தயாநிதி மாறன், துரை வைகோ, கனிமொழி,  ஜோதிமணி, சசிகாந்த் செந்தில், உள்ளிட்ட உறுப்பினர்கள் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.