LOADING

Type to search

உலக அரசியல்

நட்சத்திர உணவகத்தில் 6 சுற்றுலா பயணிகள் மரணம்

Share

தாய்லாந்தின் மத்திய பாங்காக்கில் உள்ள பாதும் வான் மாவட்டத்தில் நட்சத்திர ஓட்டலில் வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்பட சுற்றுலா பயணிகள் 6 பேர் ஒரே அறையில் பிணமாக கிடந்தனர். அவர்கள் அனைவரும் வெவ்வேறு அறைகளை பதிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களின் உடல்கள் அனைத்தும் ஒரே அறையில் கண்டுபிடிக்கப்பட்டன. உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் விஷம் குடித்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறார்கள். பலியானவர்கள் வியட்நாம் வம்சாவளியைச் சேர்ந்தவர். இதில் 2 பேர் அமெரிக்க குடியுரிமையும் பெற்றவர்கள். தாய்லாந்து நாட்டின் ஓட்டல் அறையில் பலியாகி கிடந்த வெளிநாட்டு சுற்றுலாவாசிகள் அனைவருக்கும் 37 முதல் 56 வயதுக்குள் இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.