LOADING

Type to search

இந்திய அரசியல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2பேரிடம் விசாரணை!

Share

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், அஞ்சலை, மலர்க்கொடி உள்ளிட்ட 16 பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளில் ஒருவரான திருமலையின் உறவினர் பிரதீப் என்பவரை பிடித்து செம்பியம் காவல்துறை விசாரணை நடித்துகின்றனர். அதேபோல், கொலையாளிகளின் கைதொலைபேசி அழைப்புகளை வைத்து முகிலன் என்பவரை அழைத்து வந்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.