LOADING

Type to search

உலக அரசியல்

பாகிஸ்தானில் 23 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

Share

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் 23 பேரை சுட்டுக்கொன்று பயங்கரவாதிகள் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முசாகெல் மாவட்டத்தில் பேருந்து, டிரக் உள்ளிட்ட வாகனங்களில் சென்று கொண்டிருந்த பயணிகளை இறக்கிவிட்ட பயங்கரவாதிகள், அவர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் 23-பேர் பலியாகியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை, உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்கள் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. இந்த கொடூர சம்பவத்துக்கு பலுசிஸ்தான் மாகாண முதல் அமைச்சர் சர்பராஸ் புக்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.