LOADING

Type to search

இந்திய அரசியல்

பாடசாலை மாணவர்கள் வெட்டிப் படுகொலை – சேலத்தில் பரபரப்பு

Share

சேலம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி ஒடுவன்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 12-ம் வகுப்பு படிக்கும் நவீனா (17) என்ற மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் சுகன் (15) என்ற மகனும் இருந்தனர். இருவரும் குள்ளப்ப நாயக்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்தனர். இந்த நிலையில் இருவரும் நேற்று மாலை பள்ளி முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தபோது, ஒடுவன்காடு பகுதியில் மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல ஓடுவங்காடு பகுதியில் தனது விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த ராஜாவும் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக பனமரத்துப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

நிலத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், ராஜாவின் நிலத்துக்கு அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளர் தனசேகர் என்பவர் தலைமறைவாக இருப்பதால், அவரையும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது. இரு பிள்ளைகள் கொல்லப்பட்டு, தந்தை படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.