LOADING

Type to search

இந்திய அரசியல்

தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி கொலை! – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Share

வழக்கறிஞரும் தொழிலதிபரான செந்தில் ஆறுமுகம் என்பவரை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், அண்ணா நகர் நான்காவது தெருவில் செந்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். வழக்கறிஞர் மற்றும் தொழிலதிபரான இவர் அந்தப் பகுதியில் மருந்துகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் செந்தில் ஆறுமுகம் நேற்று இரவு மருந்தகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அடைத்து விட்டு இரண்டு தெருக்கள் தள்ளி உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேருக்கு மேற்பட்ட கும்பல் அவரை சரமாரியாக ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த கொலை சம்பவம் சொத்து தகராறுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் தொழில் பிரச்னை காரணமாக நடைபெற்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.