LOADING

Type to search

இந்திய அரசியல்

மேலும் 7 நாள் ஜாமீன் நீட்டிப்பு கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மனு

Share

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம்.வழங்கிய இடைக்கால ஜாமீன் ஜூன் 1 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் ஜாமீன் நீட்டிப்பு கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 25 ஆம் தேதி டெல்லியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேர்தலில் கெஜ்ரிவால் தன் மனைவி, மகன், மகள் மற்றும் தந்தையுடன் வந்து வாக்களித்தார்.

இந்நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி கெஜ்ரிவால் கோரியுள்ளார்.