மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? “அரசியல் கேள்வி வேண்டாம்” என நடிகர் ரஜினிகாந்த் பதில் புதிய இந்தியா பிறக்க வாழ்த்து
Share
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று (மே 29)
ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன். கேதர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில் தரிசனம் செய்ய உள்ளேன். வேட்டையன் படம் சிறப்பாக வந்துள்ளது” என்று தெரிவித்தார்.
அப்போது மீண்டும் மோடி வெற்றிபெறுவார் என்று நினைக்கிறீர்களா என்று ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மன்னிக்கவும், அரசியல் கேள்வி வேண்டாம்” வேண்டாம் என்று கூறினார்.
புதிய இந்தியா பிறக்க வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து இசை பெரியதா அல்லது கவிதை பெரியதா என ஒரு போட்டி தமிழ் சினிமாவில் எழுந்துள்ளதே என்ற கேள்விக்கு, “நோ கமெண்ட்ஸ்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.
நண்பர்களுடன் இமயமலை புறப்பட்ட அவர், பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று வழிபட இருக்கிறார். அடுத்த மாதம் 3 அல்லது 4-ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
பின்னர், ஜுன் முதல் வாரம் நடக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதில் சத்யராஜ், ரஜினியின் நண்பராக நடிக்கிறார்.