LOADING

Type to search

இந்திய அரசியல்

விஜயகாந்தை ஏஐ மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த கூடாது – தேமுதிக அறிவிப்பு!

Share

தேமுதிக நிறுவனரும், மறைந்த நடிகருமான விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்துவதாக தவகல்கள் வந்தநிலையில், அனுமதியின்றி இதுபோன்று செய்வதை தவிர்த்து கொள்ளவேண்டும் என தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் காணொளி வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், காணொளி வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.