LOADING

Type to search

இந்திய அரசியல்

பிறந்த குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்த தந்தை!

Share

சென்னை வியாசர்பாடி சுந்தரம் நான்காவது தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் 2 மகள்கள். இந்நிலையில் விஜயலட்சுமிக்கு ஜூலை 1ம் தேதி ராயபுரத்தில் ஆர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 3வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜயலட்சுமி 5 நாட்களுக்குப் பிறகு குழந்தையுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் ஜூலை 7ம் தேதி பச்சிளம் குழந்தையின் வயிற்றில் ரத்த காயத்துடன் குடல் சரிந்த நிலையில் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் ரத்தக்காயம் இருந்தது. ஆயுதத்தால் குத்திய தடமும் இருந்ததால் தீவிரசிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதே சமயம் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில், கூர்மையான ஆயுதத்தால் பச்சிளம் குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் குத்தியதால் குழந்தை உயிரிழந்ததாக தெரிகிறது. குழந்தையின் தந்தை ராஜ்குமார், ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதால் 3வது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறை ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.