LOADING

Type to search

இந்திய அரசியல்

கிணற்றுக்குள் பாய்ந்த கார்; 7 பேர் பலி

Share

மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் ஆன்மிக பயணம் சென்றுக் கொண்டிருந்தவர்களின் கார், சாலையை விட்டு விலகி அந்த பகுதியில் இருந்த கிணற்றுக்குள் பாய்ந்த நிலையில், காரில் பயணம் செய்தவர்களில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர். மகாராஷ்டிரா மாநிலம், பத்னாபூர் தாலுகாவின் வசந்த் நகரில் நேற்று மாலை இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நாராயண் நிஹால் (45), பிரஹலாத் பிட்லே (65), பிரஹலாத் மகாஜன் (65), நந்தா தைடே (35), சந்திரப்கா குகே, தாராபாய் மாலுசரே மற்றும் ரஞ்சனா காம்ப்ளே (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காரில் பந்தலூரில் இருந்து இவர்கள் அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. எதிர்திசையில் வந்துக் கொண்டிருந்த பைக் மீது மோதுவதைத் தவிர்க்க முயன்ற போது கார் சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காரில் டிரைவர் உட்பட 12 பேர் இருந்துள்ளனர். வாகனத்தில் இருந்து உடல்களை மீட்க கிரேன் கொண்டு வரப்பட்டு, மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.