LOADING

Type to search

சினிமா

நகுலின் ‘வாஸ்கோடகாமா’ முன்னோட்டம் வெளியீடு

Share

நடிகை தேவயானியின் இளைய சகோதரர் நகுல், சங்கர் இயக்கிய ‘பாய்ஸ் ‘படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆவார். நகுல் நடப்பில் கடந்த 2008 -ம் வெளியான ‘காதலில் விழுந்தேன்’ படம் அவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகன் அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது டி-3 இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் நகுல் நடித்துவருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குனர் ஆர்.ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்து வெகுநாட்களாக வெளியீடு ஆகாமல் கிடப்பில் இருந்த ‘வாஸ்கோடகாமா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ‘வாஸ்கோடகாமா’ படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்த முன்னோட்டத்தில் இடம்பெற்றுள்ள வசனம் கவனம் பெற்றுள்ளது. மனிதர்களை பிரித்து.. நாட்டின் அமைதியை குலைப்பேன்..” என்கிற வசனங்களோடு படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.