LOADING

Type to search

சினிமா

இயக்குநர் சுந்தர் சி-யின் அடுத்த படத்தில் வடிவேலு, ராஷி கண்ணா

Share

சுந்தர் சி இயக்கி, நடித்து வெளியான அரண்மனை 4 வசூலில் பட்டையை கிளப்பியது. இதைத் தொடர்ந்து இவர் எடுக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே சுந்தர் சி தனது அடுத்த படத்தில் வடிவேலுவை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. மேலும், இந்த படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், சுந்தர் சி இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருவதாக தெரிகிறது. மேலும், இதில் வடிவேலு மற்றும் ராஷி கண்ணா முதன்மை பாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.