மீண்டும் வன்முறை.. வங்காள தேசத்தில் 97 பேர் பலி
Share
வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததில் காவல்துறை உள்பட 97 பேர் உயிரிழந்துள்ளனர். வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5-ம் தேதி உயர்நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. கடந்த 10-ம் தேதி உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் வங்காள தேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. போராட்டக் காரர்களுக்கும் ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினா் உள்பட 97 போ் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்கா உள்பட பல்வேறு நகர்ப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு பிற்ப்பிக்கப்பட்டது. மேலும், வங்கதேசத்தில் இன்று முதல் 3 நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், சமையல் எரிவாயு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு பொது விடுமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்காவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், “போராட்டம் என்ற பெயரில் நாசவேலைகளில் ஈடுபடுவோர் மாணவர்கள் அல்ல அவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று தெரிவித்தாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.