LOADING

Type to search

இந்திய அரசியல்

எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Share

சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே எடப்பாடி- ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் எடப்பாடி காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த காவல் நிலையத்தில் அதிகாலை திடீரென அடுத்தடுத்து 2 பெட்ரோல் குண்டுகள் காவல் நிலைய வளாகத்தில் விழுந்து வெடித்து சிதறியது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை வெளியே வந்து பார்த்தபோது அப்பொருள் வெடித்து தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக பற்றி எறிந்த தீயினை அணைத்த காவல்துறை வெளியே வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லாத நிலையில், மர்ம நபர்கள் சிலர் காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என காவல்துறை சந்தேகம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் கபிலன், சங்ககிரி டி.எஸ்.பி ராஜா உள்ளிட்ட காவல்துறை எடப்பாடி காவல் நிலையத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் எடப்பாடி காவல் நிலையத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.