சாட் நாட்டில் கனமழை – 54 பேர் பலி
Share
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சாட். இந்நாட்டின் டிபெஸ்டி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும், பல பகுதிகளில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்நாட்டில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். கனமழை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.