LOADING

Type to search

இந்திய அரசியல்

கருணாநிதி நாணயத்தை வெளியிடும் மத்திய அரசை வரவேற்று வாழ்த்துவோம் – கவிஞர் வைரமுத்து

Share

கருணாநிதி நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம்  என கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய அரசு கருணாநிதி நினைவு 100 ரூபாய் நாணயத்தை வெளியிடுகிறது. சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாலை நடக்கும் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். மத்திய பாதுகாப்பு அமைச்சர், முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், கருணாநிதி நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம்  என கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அதில், “கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது வரவேற்போம்; வாழ்த்துவோம் காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள் அவர்களுக்கு அன்போடு ஒருசொல்: இந்தியப் பணத்தாளில் இந்தியோடு தமிழும் விளங்குவதால் அது சமன்செய்யப்படுகிறது; ஏற்றுக்கொள்கிறோம் கலைஞர் நாணயத்திலும் இந்தியோடு, ‘தமிழ் வெல்லும்’ என்ற கலைஞர் கையெழுத்தும் இடம்பிடித்திருப்பதால் இங்கும் அது சமன்செய்யப்பட்டுவிட்டது வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? களிப்புறுவோம் களங்கம் எதற்கு? நிலவை ரசிப்போம்” என் தெரிவித்துள்ளார்.