LOADING

Type to search

இந்திய அரசியல்

“எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம்” – அமைச்சர் துரைமுருகன்

Share

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரணமானது இல்லை என்றும், முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சர்வசாதாரணமாக இதனை செய்கிறார் எனவும் பேசினார். மூத்த அமைச்சர்கள் குறித்து ரஜினிகாந்த் இவ்வாறு பேசியிருந்தார்.

ரஜினிகாந்தின் இந்த பேச்சு தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து இருந்த துரைமுருகன், ” சினிமாவில் மூத்த நடிகர்கள் எல்லாம் வயசாகி போய், பல் விழுந்து போய், தாடி வளர்த்து கடைசி காலத்திலும் நடித்துக் கொண்டிருப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதா? அப்படித்தான்” என்று கூறினார். அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசியது தொடர்பாக ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “துரைமுருகன் நீண்டகால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. நட்பு எப்போதும் தொடரும்” என தெரிவித்தார். இந்நிலையில், இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் துரைமுருகன் “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம். நாங்கள் எப்போதும் போல் நண்பர்களாகவே இருப்போம்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.