LOADING

Type to search

இந்திய அரசியல்

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Share

ஃபார்முலா 4 கார் பந்தயத்தின் இன்றைய பயிற்சி போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பந்தயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிமீ தூரத்திற்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறுகிறது. இந்நிலையில், தற்போது ஃபார்முலா 4 கார் பந்தய பாதுகாப்பு சோதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில் பயிற்சி போட்டிகளை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.