LOADING

Type to search

இந்திய அரசியல்

மனைவியை கொலை செய்ய நண்பனை ஏவிவிட்ட கணவரன் கைது

Share

நண்பரை கூலிப்படையாக ஏவி, மனைவியை கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். ஹாசன், பேலுார் எகச்சிஷெட்டிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ், 45. இவரது மனைவி ஷீலா, 42. குடும்ப தகராறில் இருவரும், சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர்.

கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் இருந்து, ஷீலா திடீரென மாயமானார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால், அவர் கிடைக்கவில்லை.ஷீலா மாயமானதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள கிணற்றில், ஷீலா பிணமாக மிதந்தார். அவரை யாரோ கொலை செய்ததாக குடும்பத்தினர் கூறினர்.ஷீலாவின் வீட்டின் அருகே பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, ஷீலா கழுத்தை நெரித்து ஒருவர் கொலை செய்து, உடலை கிணற்றில் வீசிய காட்சிகள் பதிவாகி இருந்தன.விசாரணையில் அந்த நபர், ஷீலாவின் கணவர் ஜெகதீஷின் நண்பர் ராஜசேகர், 45 என்பது தெரிந்தது. நேற்று அவர் கைது செய்யப்பட்டார்.மனைவியை கொல்ல, ஜெகதீஷ் தன்னை கூலிப்படையாக ஏவி விட்டதாகவும், லட்சக்கணக்கில் பணம் தருவதாகவும் கூறினார் என்று, தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின்படி, ஜெகதீஷும் கைது செய்யப்பட்டார்.